கிருபானந்த வாரியார் பிறந்த நாள்

ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்த கிருபானந்த வாரியார் (ஆகஸ்ட் 25 1906 - நவம்பர் 7 1993) அவர்களின் பிறந்ததினம் இன்றாகும். சமயம் இலக்கியம் மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர்
இவரது இயற்பெயர் கிருபானந்த வாரி. தமிழ் நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் மல்லையதாசருக்கும் மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்த பதினொரு பிள்ளைகளில் நான்காவது மகவாக அவதரித்தவர். ஐந்தாவது வயதில் திருவண்ணாமலையில் வீர சைவ குல முறைப்படி பாணிபாத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்விக்கப்பெற்றார்.

இவருக்கு இவரின் தந்தையாரே கல்வி இசை இலக்கி இலக்கணங்களைக் கற்றுத் தந்தார். எட்டுவயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர். 12 வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர். பதினெட்டு வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார்.




“ஆசையின்றிப் பயன் கருதாமல் மக்களுக்குச் சேவை செய்தால் புகழ் தானே வந்து சேரும். புகழுக்கு ஆசைப்படக் கூடாது, மலரை நாடி வண்டுகள் வருவதுபோல பற்றற்ற சேவையால் புகழ் தானே வரும்”.

”இளமை வளமையாக ஒழுக்கமாக அமையவில்லையானால் இடைப்பகுதியும் கடைப்பகுதியும் ஒழுங்காக அமைய மாட்டா”.

”பிறர் குற்றங்களை மன்னிப்பதுதான் பெருமையும் பொறுமையுமாகும்"

வாரியார்

Read more...

விக்கிபீடியாவிற்கு நீங்களும் பங்களிப்புச்செய்யலாமே ????

பதிவுலக ஜாம்பவான்களே வணக்கம்

வலைப்பதிவுகளை நான் புரிந்து கொண்ட மட்டில் அதன் தோற்றங்கள் கணினி உபயோகிப்பவர்களிடமிருந்தே பிறக்கிறது, பிறக்க முடியும். அதனாலேயே இன்னமும் பிற ஊடகங்களிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையிலே இப்பதிவுகள் தொடர்கிறது. ஆனால விக்கிபீடியா போன்ற கலைக்களஞ்சியங்கள் அதைவிட மிக விரிந்தது.

நீங்கள் அனைவரும் விக்கிபீடியா பற்றி அறிந்தவர்களாகவே இருப்பீர்கள் ஆனால் நீங்கள் ஏன் அத்தளத்திற்கு பங்களிப்புச்செய்ய விரும்புவதில்லை ? (ஒரு சிலர் அங்கும் கொடி கட்டிப்பறக்கிறார்கள் என்பது வேறு கதை ) ஏனெனில் விக்கிபீடியா தமிழ் பகுதியில் அனேகமாக பகுதிகள் இன்னும் தொகுக்கப்படாமலே வெறுமனவே உள்ளன இதுபற்றி நீங்கள் அறிவீர்களா ? விக்கிபீடியா தளமோ திறமூலக்கொள்கையுடைய தளம் யாரும் சென்று எழுதலாம் வலைப்பதிவுகளில் ஏராளமான நல்ல விடையங்கள் பரிமாறப்படுகின்றன உதாரணமாக பதிவோன்றை எழுதுபவர் (சிறந்த பதிவென்று உங்களுக்குத்தோன்றினால் ) தமிழ்மணம் தளத்திற்கு சேர்க்கைக்கு அளித்தபின் அப்படியே விக்கிபீடியா தளத்திக்கு சென்று எங்கெங்கு உங்கள் ஆக்கங்களை இடலாமென நினைக்கிறீர்களோ அங்கே பங்களிப்புச்செய்துவிட்டுவரலாமே ? அங்கு எவ்வாறு பங்களிப்புச்செய்வதென்ற முறைகளை அவர்களே முறையாக விளக்கம் கொடுத்துள்ளார்கள்

ஆனால் வலைப்பதிவு உலகில் பெரியவர்கள் மாதிரிக்காட்டிக்கொள்பவர்கள் , தேவையில்லாத விடையங்களுக்கெல்லாம் பதிவெழுதிவிட்டு பின்னூட்டங்களை வாங்கிக்குவிப்பவர்கள் (கடந்த கிழமை இவ்வாறான பதிவுகள் தான் அதிகம்) மற்றும் தமிழ் வளர்ச்சிக்கு தாமும் பங்களிப்புச்செய்கிறோம் என பெருமையாகக் கூறிக்கோள்பவர்கள் எந்தவகையில் பங்களிப்புச்செய்யவருவார்களே தெரியாது (கும்மிப்பதிவு மொக்கைப்பதிவு பற்றி போடுபவர்களை இங்கு நான் கணக்கிலேடுக்கவில்லை ) !!!

என்னுடைய கருத்துக்களை சிலர் ஆதரிக்கலாம், சிலர் மறுக்கலாம் தவறொன்றுமில்லை. ஒரு நண்பனின் தோளில் கை போட்டு தோழமையுடன் பேசுவது போல் என் கருத்தை சொல்லியிருக்கின்றேன்.

நன்றியுடன்
மாயா

Read more...

இலங்கைத் தமிழ் மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் படிக்கவிரும்புவது தப்பா ?

இலங்கையிலுள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் கல்விபயிலும் மாணவர்கள் தமது இறுதி ஆண்டுக் கல்வியை வெளிநாடுகளில் தொடரும் வாய்ப்பு ஒன்று உள்ளது. இதில் இணையவிரும்புவோருக்கான ஒன்றுகூடல் அண்மையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. ஏராளமான தமிழ் மாணவர்கள் (நான் உட்பட ) இதில் கலந்து கொண்டிருந்தனர். இதில் அவுஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களின் விபரங்கள் கூறப்பட்டபோது ஒருவிடயம் ஆணித்தரமாக கூறப்பட்டது
"People who was born in jaffna or Batticalo, We are very sorry."
ஆஸ்திரேலியா கனவுகளுடன் இருந்த என்போன்ற நண்பர்களுக்கு ஏதோ இடிவது போன்றிருந்தது . . . . . ? ? ?
இதைப்பற்றி இன்னோர் இலங்கை நண்பர் தனது வலைப்பூவில் விரிவாக கூறி (ஆதங்கத்தை கொட்டி ) உள்ளார் தயவுசெய்து நீங்களும் சென்று பாருங்கள் பார்த்துவிட்டு உங்கள் தரப்பு நியாயங்களை பின்னூட்டமாகத்தெரிவித்து விடுங்கள்
இதோ முகவரி
விண்ணப்பித்த ஒருவருக்கு அவுஸ்ரேலியா சொன்ன காரணத்தை ஆதாரமாக பாக்க பற்றி சயந்தன் அண்ணா அனுப்பிய பிரதியொன்று

நன்றி

Read more...

ஈழத்துக் கலைஞர்கள் [ பாகம் 1 ]

ஈழத்துக்கவிஞர்கள்

வணக்கம் நண்பர்களே !
அண்மையில்
ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் பற்றிய தகவல்களை பதிந்திருந்தேன் அதனைத்தொடர்ந்து இலங்கை வாழ் கலைஞர்கள் மற்றும் மறைந்த கலைஞர்கள் புலம்பெயர்ந்து வாழும் கலைஞர்களின் விபரங்களை என் சக்திக்கு ஏற்றவாறு திரட்டித் தரலாமென்றிருக்கிறேன்

முதலில் ஈழத்துக்கவிஞர்கள் பற்றிய தகவல்களைதருகிறேன் தருகிறேன் இனிவரும்காலங்களில் அவர்களைப்பற்றிய முழு விபரங்களை சேகரித்து தரலாமென்றிருக்கிறேன் நான் சிறியவன் பிழைகள் ஏதுமிருப்பின் பின்னூட்டம் மூலம் தெரிவிக்கலாம் பின்னூட்டங்களே எனக்கு நீங்கள் தரும் உற்சாகம்

மற்றும் ஈழத்துக்கவிஞர்கள் பற்றி அறிந்துள்ள
கானாபிரபா அண்ணா சின்னக்குட்டியார் யோகன் அண்ணா வெற்றி நீங்கள் இதிலுள்ள பிழைகளை நிச்சயம் திருத்துவீர்கள் என நினைக்கிறேன்

1] கல்லடி வேலுப்பிள்ளை
2] வீரமணி ஐயர் - இணுவில்
3] கவிஞர் நீலாவணன் - பெரிய நீலாவணை
4] சு.வில்வரத்தினம் - புங்குடுதீவு
5] காசி ஆனந்தன் (காத்தமுத்து சிவானந்தன்) - மட்டக்களப்பு
6] தாமரைத்தீவான் - திருகோணமலை
7] நாவலியூர் சோமசுந்தர புலவர்
8] மகாகவி உருத்திரமூர்த்தி - அளவையூர்
9] இளவாலை விஜயேந்திரன் - இளவாலை
10] இராமலிங்கம் அம்பிகைபாகர்
11] போராட்டக் கவிஞர் சுபத்திரன் - மட்டக்களப்பு
12 ] சோலைக்கிளி( உதுமாலெவ்வை முகம்மது அதீக் ) - கல்முனை
13] பொன் கணேசமூர்த்தி - யாழ்ப்பாணம்
14] மன்னவன் கந்தப்பு
15] பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை
16 ] சில்லையூர் செல்வராசன்
17] புதுவை இரத்தினதுரை
18] பொன். காந்தன்
19] தமிழ்க்கவி
20] கை.சரவணன்
22] நிலா தமிழின் தாசன்
23] காரை சுந்தரம்பிளை
24] கவிஞர் கந்தவனம்
25] வட்டுக்கோட்டை
26] நல்லதம்பிப் புலவர்
27] அணலை ஆறு
28] இராஜேந்திரம்(கனடா)
29] அம்புலி
30] மலைமகள்
31] அலைமகள்
32] சோழநிலா
33] நிலாந்தன்
34] அமரதாஸ்
35] கருணாகரன்
36] வளவைநாடன்
37] வேலணையூர் சுரேஷ்
38] செங்கதிர்
39] மாமனிதர் நாவண்ணன்
40] பண்டிதர் பரந்தாமன்
41] பண்டிதர் பஞ்சாட்சரம்
42] முல்லை கோணேஸ்
43] முல்லை கமல்
44] சேரன்
45] வ.ஜ.ச ஜெயபாலன்
46] சிவசேகரம்
47] நளாயினி
48] சாருமதி
47] அம்புலி
48] மலைமகள்
49] சஞ்சீவ் காந்த்(இளைஞன்)
50] மேமன்கவி
51] வ.ஐ.ச. ஜெயபாலன்
52]' மலையக பாரதி' சி.வி.வேலுப்பிள்ளை
53] குறிஞ்சித் தென்னவன்
54] அப்துல் அஸீஸ்[அல் அஸுமத்]
55] ஈழவாணன்
56] வி.கந்தவனம்[தற்போது கனடாவில்]
57] நவாலியூர் செல்லத்துரை
58] மாதகல் மயிவாகனப் புலவர்
59] சந்திரபோபோஸ்
யாராவது கவிஞர்களின் பெயர் விடுபட்டிருந்தால் மன்னித்து பின்னூட்டம் மூலம் தெரிவியுங்கள்
இயன்றவரை இந்தப்பயணம் தொடரும்

நன்றி

Read more...

இந்திய வலைப்பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர வாழ்த்துக்களை முற்கூட்டியே தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்


எங்கோ வருகிது பூகம்பம் இந்திய வானம் உடைகின்றது !
இன்னோரு நாட்டில் இலை விழுந்தாலும் இந்தியக்கண்தான் அழுகின்றது !

இலங்கையர்களுக்கு இது முற்றிலும் உண்மை அந்தவகையில் இந்திய வலைப்பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர வாழ்த்துக்களை முற்கூட்டியே தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்

Read more...

ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்

இப்பதிவில் இலங்கையிலிருந்து வெளிவந்த திரைப்படங்களையும் சில திரைப்படங்களின் விபரங்களையும் உள்ளடக்க முனைகிறேன் நான் சிறியவன் ? ? சில திரைப்படங்கள் விடுபட்டிருக்கலாம். தெரிந்தவர்கள் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்தினால் மிகவும் உதவியாயிருக்கும் நூலகமொன்றில் நேரம்போகாமல் ? ? புத்தகமொன்றைப்புரட்டிக்கொண்டிருந்த போது கண்ணுற்றேன் விடுவேனா ! உடனே எழுதி முடித்துவிட்டேன் எனினும் ஏனைய திரைப்படங்களின் முழுமையான விபரம் கிடைக்கவில்ல

1 )
சமுதாயம் (1962)

2)
தோட்டக்காரி (1963)

3) கடமையின் எல்லை (1966)
இயக்குனர் : எம். வேதநாயகம்
தயாரிப்பாளர் : எம். வேதநாயகம்
கதை : வில்லியம் ஷேக்ஸ்பியர்
திரைக்கதை : வித்துவான் ஆனந்தராயர்
நடிப்பு : தேவன் அழகக்கோன் , எம். உதயகுமார் , பொனி ரொபேர்ட்ஸ் , ஏ.,ரகுநாதன் , ஐராங்கனி , ஜி. நிர்மலா , ஆர். அமிர்தவாசகம் , எஸ். ரி. அரசு , கே. துரைசிங்கம் , ஆர். காசிநாதன் , எஸ். பஸ்தியாம்பிள்ளை

* யாழ்ப்பாண ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆங்கில விரிவுரையாளரான எம். வேதநாயகத்தினால் தயாரிக்கப்பட்டது. இது ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்(Hamlet) என்ற ஆங்கில நாடகத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட சரித்திரப்படம் ஆகும்.

4)
பாச நிலா (1966)

5)
டாக்சி டிறைவர் (1966)

6)
நிர்மலா (1968 )

7)
மஞ்சள் குங்குமம் (1970)

8)
வெண் சங்கு (1970)

9) குத்துவிளக்கு (1972)
இயக்குனர் : மகேந்திரன்
தயாரிப்பாளர் : எஸ். துரைராஜா
நடிப்பு : ஆனந்தன் , ஜெயகாந்த் , லீலா நாராயணன் , பேரம்பலம் , எம். எஸ். ரத்தினம் , எஸ். ராம்தாஸ் , நாகேந்திரா

பெரும்பாலான வெளிப்புறக்காட்சிகள் வடமராட்சியில் பருத்தித்துறையை அண்டிய பகுதிகளில் படமாக்கப்பட்டன. பிரபல கட்டிடக்கலை நிபுணரான வீ. எஸ். துரைராஜா தயாரித்தார்

10)
மீனவப் பெண் (1973)

11)
புதிய காற்று (1975)

12)
கோமாளிகள் (1976)

13) பொன்மணி(1977)
இயக்குனர் : தர்மசேன பத்திராஜா
நடிப்பு : பாலச்சந்திரன் , சுபாஷினி , சித்திரலேகா மெளனகுரு , எம். எஸ். பத்மநாதன் , கலாநிதி செ. சிவஞானசுந்தரம்(நந்தி) , கைலாசப்தி

* சிங்களத் திரைப்பட இயக்குனரான தர்மசேன பத்திராஜாவினால் இயக்கப்பெற்றது.

14) காத்திருப்பேன் உனக்காக (1977)
இயக்குனர் : எஸ். வி. சந்திரன்
தயாரிப்பாளர் : எம். ஜெயராமச்சந்திரன், எம். தீனதயாளன், எம். செல்வராஜ்
கதை : எம். செல்வராஜ்
திரைக்கதை : நவாலியூர் நா. செல்லத்துரை
நடிப்பு : என். சிவராம்,கீதாஞ்சலி , ரவி செல்வராஜ்,விஸ்வநாதராஜா ,நவாலியூர் நா. செல்லத்துரை ,ருக்மணி தேவி,எம். எம். ஏ. லத்தீப் , தர்மலிங்கம்

* சிறந்த நடிப்பு,இனிய பாடல்கள், நல்ல திரைக்கதை என்று இருந்தபோதிலும், நாட்டில் ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக, எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

15)
நான் உங்கள் தோழன் (1978)
இயக்குனர் : எஸ். வி. சந்திரன்
தயாரிப்பாளர் : வி. பி. கணேசன்
கதை : கலைச்செல்வன்
நடிப்பு : வி. பி. கணேசன் , சுபாஷினி , எஸ். ராம்தாஸ் , எம். எம். ஏ. லத்தீப் , கே. ஏ. ஜவாஹர் , கலைச்செல்வன் , ஹரிதாஸ் , ருக்மணி தேவி , ஜெனிடா , சந்திரகலா , எஸ். என். தனரட்னம் , விமல் சொக்கநாதன் , ஜெயதேவி

1978ம் ஆண்டு இலங்கை திரைப்பட உலகிற்கு ஒரு முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டில் மொத்தம் 6 ஈழத்து தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. வி. பி. கணேசன் தனது முதலாவது படமான புதிய காற்றுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து எடுத்த திரைப்படம்.அவரே இந்தமுறையும் பிரதான பாத்திரத்தில் நடித்தார்.

* கொழும்பு, மலையகம் என்பவற்றோடு யாழ்ப்பாணத்து நகர வீதிகளிலும், மட்டக்களப்பு மாமாங்கத் திருவிழாவிலும் கூட படப்ப்டிப்பு நடத்தினார்கள்.

* அக்கால இந்தியப்படங்களில் சிலவேளைகளில் அரசியல் தலைவர்களின் மகாநாடுகள், இறுதி ஊர்வலங்கள் என்பனவற்றை இணத்துக் கொள்வதைப் போல, இத்திரைப்படத்தில் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களின் இறுதி ஊர்வலம் இணைக்கப்பட்டது.

16) வாடைக்காற்று (1978)
இயக்குனர் : பிரேம்நாத் மொறாயஸ்
தயாரிப்பாளர் : ஏ. சிவதாசன், ஆர். மகேந்திரன், எஸ். குணரட்னம்
கதை : செங்கை ஆழியான்
திரைக்கதை : செம்பியன் செல்வன், கே. எம். வாசகர்
நடிப்பு : ஏ. இ. மனோகரன் , கே. எஸ். பாலச்சந்திரன் , Dr.கே. இந்திரகுமார் , சந்திரகலா , ஆனந்தராணி , இராசரட்னம் , எஸ். ஜேசுரட்னம் , ஏ. பிரான்சிஸ் , கே. ஏ. ஜவாஹர் , எஸ். எஸ். கணேசபிள்ளை , ஜெயதேவி , லடிஸ் வீரமணி , டிங்கிரி கனகரட்னம் , சிவகுரு , சிவபாலன் , நேரு

கமலாலயம் மூவிஸ் தயாரித்த இந்த திரைப்படம் மன்னார் பகுதியில் உள்ள பேசாலையிலும், வட்டுக்கோட்டை, கந்தரோடை, கல்லுண்டாய், வல்லிபுரம் ஆகிய பகுதிகளிலும் படமாக்கப்பட்டது. மீனவ சமூகத்தின் வாழ்வினை கூறும் இத்திரைப்படம் 1978 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற விருதினைப் பெற்றது.

* பல சிங்களத் திரைப்படங்களை இயக்கிய பிரேம்நாத் மொறாயஸ் இந்த திரைப்படத்தை இயக்கினார். கே. எஸ். பாலச்சந்திரன் உதவி இயக்குனராக பணியாற்றினார். ஈழத்து ரத்தினம், சில்லையூர் செல்வராசன் ஆகியோர் இயற்றிய பாடல்களை ஜோசப் ராசேந்திரன், முத்தழகு, சுஜாதா அத்தநாயக்க ஆகியோர் பாடினார்கள். நடன அமைப்பை வேல் ஆனந்தனும், சண்டைப் பயிற்சியை நேருவும் கவனித்துக் கொண்டார்கள்.

* 'வாடைக் காற்று' நாவலின் கதைக்களம் நெடுந்தீவாக இருந்தபோதிலும், போக்குவரத்துச்சிரமங்களின் காரணமாக அதே இயற்கைச்சூழலில், பனங் காணிகள், மட்டக் குதிரை (Ponies), கரை வலை என்பனவுள்ள பேசாலைக் கிராமத்தில் தான் பெரும்பகுதி படமாக்கப்பட்டது.

* இலங்கைத் தமிழ்த் திரைப்படமொன்றின் பாடல்கள் இசைத்தட்டாக முதலிலேயே வெளிவந்தது என்ற பெருமையைப் பெற்றது, 'வாடைக்காற்று' பாடல்கள்தான்.

* வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே என்ற இந்தப் பாடல் வானொலி மூலம் இலங்கை, இந்திய ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

மேலும் விபரங்களுக்கு கானாபிரபா அண்ணாவின் வாடைக்காற்று பற்றிய பதிவு

17) தென்றலும் புயலும் (1978)
இயக்குனர் : எம். ஏ. கபூர்
தயாரிப்பாளர் : மருத்துவர் எஸ். ஆர். வேதநாயகம்
திரைக்கதை : எஸ். ஆர். வேதநாயகம்
நடிப்பு : சிவபாதவிருதையர் , ஹெலன்குமாரி , சாம்பசிவம் , எஸ். ஆர். வேதநாயகம் , சித்தி அமரசிங்கம் , ஏ. ஜவாஹர் , டீன் குமார் , செல்வம் பெர்னாண்டோ , சந்திரகலா , தனரட்னம

யாழ்ப்பாணத்தில் ஒரேநேரம் "லிடோ" திரையரங்கில் "தென்றலும் புயலும்" திரைப்படமும், "ராணி" திரையரங்கில் "வாடைக்காற்று" திரைப்படமும் காண்பிக்கப்பட்டன. இப்படி இரண்டு ஈழத்து தமிழ்த்திரைப்படங்கள் ஒரு நகரத்தில் சமகாலத்தில் திரையிடப்படுவது மிகவும் அரிதானதென அந்தக்கால இளைஞர்கள் கதைத்தனர்

18)
தெய்வம் தந்த வீடு (1978)

19) ஏமாளிகள் (1978)
இயக்குனர் : எஸ். இராமநாதன்
தயாரிப்பாளர் : ஏ. எல். எம். மவுஜூட்
கதை : கே ஏ எஸ். ராம்தாஸ்
நடிப்பு : என். சிவராம் , ஹெலன்குமாரி , ராஜலட்சுமி , ரி. ராஜகோபால் , எஸ். செல்வசேகரன் , கே. ஏ. ஜவாஹர் , இரா பத்மநாதன்
இசை : கண்ணன் - நேசம்

கோமாளிகள் பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து எஸ். ராம்தாஸ் கதை, வசனம் எழுதி வெளியிட்ட இரண்டாவது படம்.

20)
அனுராகம் (1978)
இயக்குனர : யசபாலித்த நாணயக்கார
தயாரிப்பாளர் : யசபாலித்த நாணயக்கார
திரைக்கதை : பி. எஸ். நாகலிங்கம்
நடிப்பு : என். சிவராம் , சந்திரகலா , அனோஜா , எஸ். என். தனரட்னம் , எஸ். விஸ்வநாதராஜா , டொன் பொஸ்கோ , செல்வம் பெர்னாண்டோ

* சமகாலத்தில் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே கதை படமாக்கப்பட்டது .கீதிகா என்ற பெயரில் சிங்களப் படமாக தயாரித்தார்கள்.பிரதான பாத்திரங்களில் சிங்களப் படத்தில் விஜய குமாரணதுங்கவும், மாலினி பொன்சேகாவும் நடித்தார்கள்.

* இத்திரைப்படத்தை தயாரித்து இயக்கிய யசபாலித்த நாணயக்கார என்பவரே இதே போல இரண்டு மொழிகளிலும் படமாகிய நாடு போற்ற வாழ்க திரைப்படத்தையும் இயக்கியவர். இவர் இடதுசாரி அரசியல்வாதியான வாசுதேவ நாணயக்காரவின் உடன் பிறந்த சகோதரர் ஆவார்.

21)
எங்களில் ஒருவன் (1979)

22)
மாமியார் வீடு (1979)

23 )
நெஞ்சுக்கு நீதி (1980)

24)
இரத்தத்தின் இரத்தமே (1980)

25) அவள் ஒரு ஜீவநதி (1980 )
இயக்குனர் :ஜே. பி. ரொபேர்ட், ஜோ மைக்கல்
கதை :மாத்தளை கார்த்திகேசு
நடிப்பு : கே. எஸ். பாலச்சந்திரன் , டீன் குமார் , விஜயராஜா , எம். ஏகாம்பரம் , கார்த்திகேசு , திருச்செந்தூரன் , அனுஷா , ஆர். சிதம்பரம் , சீதாராமன் , , கந்தையா , ஸ்ரீதர் , மோகன்குமார் , சந்திரகலாஈழத்து ரத்தினம், சி. மெளனகுரு, கார்த்திகேசு ஆகியோர் இயற்றிய பாடல்களுக்கு, இசை அமைப்பாளர் எம். எஸ். செல்வராஜா இசை அமைக்க, வி. முத்தழகு, கலாவதி, எஸ். வி. ஆர். கணபதிப்பிள்ளை, சுஜாதா அத்தனாயக்க, ஜோசப் ராஜேந்திரன் ஆகியோர் பாடினார்கள்.

26) நாடு போற்ற வாழ்க (1981)
இயக்குனர் : யசபாலித்த நாணயக்கார
கதை : எஸ். என். தனரட்ணம்
நடிப்பு : வி. பி, கணேசன் , கே. எஸ். பாலச்சந்திரன் , கீதா குமாரதுங்க , ஸ்வர்ணா மல்லவராச்சி , எஸ். ராம்தாஸ் , ஏ. லத்தீப் , எம். ஏகாம்பரம் , உபாலி செல்வசேகரன் , டொன் பொஸ்கோ , மணிமேகலை , புஸ்பா , ரஞ்சனி

* இலங்கையின் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான வி. பி. கணேசன் தயாரித்த மூன்றாவது திரைப்படம் இது. மலையகத்தில் தியத்தலாவை, பண்டாரவளை, ஹப்புத்தளை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது.

* ஒரே நேரத்தில் இந்தக்கதை 'அஞ்சானா' என்ற பெயரில் சிங்களப் படமாகவும் எடுக்கப்பட்டது. இதில் பிரபல நடிகர்களான விஜய குமாரதுங்க ரொபின் பெர்னாண்டோ இருவரும் முக்கிய பாத்திரங்களில் ந்டித்தார்கள்.

27)
பாதை மாறிய பருவங்கள் (1982)

28) ஷார்மிளாவின் இதய ராகம் (1993)
இயக்குனர் : சுனில் சோம பீரிஸ்
தயாரிப்பாளர் : பேராதனை ஜுனைதீன், ஜெக்கியா ஜுனைதீன்
கதை : ஜெக்கியா ஜுனைதீன்
திரைக்கதை : பேராதனை ஜுனைதீன்
நடிப்பு : சசி விஜேந்திரா , வீணா ஜெயக்கொடி , கே. ஏ. ஜவாஹர் , எஸ். ராம்தாஸ் , கே. எஸ். பாலச்சந்திரன் , எம். எம். ஏ. லத்தீப் , ஜோபு நசீர் , எஸ். விஸ்வநாதராஜா , எஸ். என். தனரட்ணம், கமலஸ்ரீ , ராஜம் , திவானி , ஜெயப்பிரியா , பாத்திமா , சுஸ்பிகா

* இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது தமிழ் வர்ணத்திரைப்படம்.
* 1989ல் த்யாரித்து முடிக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 4 வருடங்கள் கழிந்தபின்னரே 1993ல் திரைக்கு வந்தது.

* இத்திரைப்படம் "ஒப மட்ட வாசனா" என்ற தலைப்பில் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

இப்போது தமிழ்ப்படங்கள் முற்றிலுமாக வெளிவருவது இல்லை காரணம் அயல்மொழி திரைப்படங்களின் காரணமாயிருக்குமா ?

Read more...

உண்மையில் யாழ்ப்பாண அரச குடும்பத்தினர் தானா ?

"1621ம் ஆண்டுக்குள் யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்ட போதிலும், என் மூலமும் எனது குடும்பம், மற்றும் உறவினர்கள் மூலமும் யாழ்ப்பாண இராச்சியம் இன்றும் இருக்கிறது. ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் பலமான இராச்சியம் இருந்தது என்பதை இன்றைய இளம் தலைமுறையினருக்கு நிரூபிக்கவே நான் யாரென்பதைச் சொல்ல முன்வந்தேன்"
இவ்வாறு சொல்வது யாருமில்லை யாழ்ப்பாண மன்னர்களின் வாரிசு என சொல்லிக்கொள்ளும் திரு. கனகராஜா
"ஆரியச்சக்கரவர்தி" வம்சத்தின் வாரிசுகள் தாங்கள்தான் என ஒரு இணையத்தளத்தில் ஆங்கிலத்தில் உரிமை கொண்டாடுகிறார்கள் சிலர். யாழ்ப்பாண அரச குடும்பத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் என அதன் முகப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. " Remigius Kanagarajah " என்பவர்தானாம் இப்போது இளவரசர் எனவும் அத்தளத்தில் புகைப்படங்களுடன் குறிப்பிடப்பட்டுளது இவர்கள் இப்போது நெதர்லாந்தில் வசிக்கிறார்களாம்

இவ் இணையத்தளம் யாழ்ப்பாண அரச குடும்பத்தின் இணையத்தளம் பற்றி வெற்றியின் பக்கம் இல் முன்பு பெரியவிவாதமே நடந்து முடிந்திருக்கிறது எனினும் எனினும் அரச குடும்பத்தின் இத்தளத்தை அண்மையில்தான் கண்ணுற்றேன் சரியான எரிச்சலாக இருந்நது அதன்பின் GOOGLE இல் தேடும் போது தான் வெற்றியின் பக்கம் அகப்பட்டது

நன்றி வெற்றி

நல்லூரினைத்தளமாகக்கொண்டு ஆட்சிபுரிந்த சங்கிலியனுக்கு தாய்மொழி தமிழ்தானே ? ஆனால் அரச வம்சாவழியினரின் இணையத்தளதிதில் மருந்துக்கக்கூட தமிழைக்காணோம் என்ன கொடுமையப்பா இது ? போதாதற்கு அவர் தமிழ்வருப்பிறப்பிற்கு வாழ்த்துக்களையும் ஆங்கிலத்தில் வாழ்த்துத்தெரிவிக்கிறார் ???? இவையெல்லாம் இவ்வளவு காலமும் எங்க இருந்தவை என்றே தெரியாது. ஆளாளுக்கு ஒரு இணையத்தளம் உருவாக்கத் தொடங்கினாப் பிறகுதான் இப்படி பலதும் புதிசு புதிசா வெளில வருகுது. இதை யார் என்ன தேவைக்காக செய்யினம் என்றதுதான் முக்கியமாக நோக்கப்பட வேணும்..! மற்றும் யாழ்ப்பாண இராச்சியம் பலமான இராச்சியம் என இவர் கூறித்தான் புரிய வேணும் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்த்தனம் !
யாழ்ப்பாணத்தின் மண்வாசனையை இனிதே நுகர்ந்த ஒருவனும் இத்தளம் யாழ்ப்பாண மன்னர்களின் வாரிசுக்களின் இணையதளமென நம்பமாட்டான் ஏனெனில் தமிழைக்காணோம் ? ஒரு வேளை அனைத்து நாட்டு மக்களும் வாசிக்கக்கூடியதாயிருக்கட்டுமென ஆங்கிலத்தில் வடிவமைத்தனரோ ? ஆனாலும் யாழ் அரச குடும்பத்தின் இணையத்தளம் தமிழில் இல்லாமல் நடாத்துவதேன் ?
இன்னுமொருவிடையம்

இப்படி இணையத்தில் யாழ்பாண அர குடும்பம் என போடும் அளவிற்கு இவர்கள் என்ன செய்தார்கள் என தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது... (அந்த சந்ததியில் பிறந்தால் மட்டும் போதுமா) இதை நான் குத்தி காட்ட கேட்கவில்லை.. தகவலை அறிந்து கொள்ளவே கேட்கின்றேன் எம் முன்னோர்களை வைத்தா நாங்கள் வாழ வேண்டும்... உண்மையில் வரலாறுகள் அறிந்தவர்கள் பலர் இருப்பார்கள். அவர்கள் என் ஐயத்தைத் தீர்த்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் இப் பதிவு அப்படியாயின் இவர்கள்இப்போது உரிமை கொண்டாடுபவர்கள் யார்? இவர்கள் கடைசி மன்னன் சங்கிலியனுக்கு என்ன முறை? இதை நிரூபிக்க இவர்களிடம் என்ன ஆதாரங்கள் இருக்கின்றன?

ஆனால் நான் வாசித்த புத்தகமொன்றில் இவ்வாறுள்ளது
" நல்லூரின் கடைசி அரசன் சங்கிலிகுமாரனின் வாரிசுகள் இரண்டு ஆண்குழந்தைகளும் போத்துக்கேயரால், கோவாவுக்கு எடுத்துச் செல்லப் பட்டு, கத்தோலிக்க மத குருமாராக்கப் பட்டார்கள். யாழ்ப்பாண இராசதானியின் எந்த வாரிசையும் போத்துக்கேயர் உயிருடன் விட்டு வைக்க விரும்பவில்லை. சங்கிலிகுமாரன் மிகுந்த சைவநம்பிக்கையுள்ளவன், அதனால் தான் மன்னாரில் புனித சவேரியாரின் பாதிரியார்களால் கிறிஸ்தவ மதத்துக்கு மதத்துக்கு மாறியவர்களையெல்லாம் தானே நேரில் சென்று வெட்டிக் கொன்றான், போத்துக்கேயர் அந்த இடத்தில் வேதசாட்சிகள் கோயில் என்ற தேவாலயத்தைக் கட்டினார்கள், அது இன்றும் மன்னாருக்கும், பேசாலைக்குமிடையிலுள்ள தோட்டவெளி என்னுமிடத்திலுண்டு. புனித சவேரியார் கிறிஸ்தவர்களைக் கொன்றதற்கு சங்கிலி குமாரனைப் பழிவாங்குமாறு லிஸ்பனுக்குக் கடிதம் எழுதியதால் தான், போத்துக்கேயர் யாழ்ப்பாணத்தின் மீது, சிங்களக் கூலிப்படையின் உதவியுடன் போர் தொடுத்தார்கள். மனைவி மங்களத்தம்மாளுடனும், இரண்டு ஆண்குழந்தைகளுடனும், நல்லூரின் ஏராளமான நகைகளுடனும், மதுரை நாயக்கர்களிடம் உதவி கேட்கத் தப்பியோடிய சங்கிலிகுமாரனைக் காங்கேசன் துறைக் கடலில் கைப்பற்றிய போத்துக்கேயர், அரசனை கோவாவில் தூக்கிலிட்டார்கள், யாழ்ப்பாண இராசதானிக்கு வாரிசு இல்லாமல் செய்வதற்காகவும், கிறிஸ்தவர்களைக் கொன்ற, சங்கிலியனைப் பழிவாங்குவதற்காக நல்லூரின் இரண்டு இளவரசர்களையும், கிறிஸ்தவ பாதிரிமாராக்கினார்கள் போத்துக்கேயர்கள். அதிலும், இருவரையும் பிரித்து, ஒருவரை லிஸ்பனிலும், மற்றவரையும் கோவாவில் வைத்துமிருந்தார்கள், அவர்களும் பிரிந்தே இறந்தார்கள். "

அதனால் யாழ்ப்பாண இராசதானியின் வாரிசுகள் யாருமில்லை. அதிலும் போத்துக்கேய பெயர்களையுடைய வாரிசுகள் இருக்க முடியாதென நினைக்கிறேன். இதில் எவ்வளவு உண்மை என்று எனக்குத் தெரியாது நான் சின்னப்பொடியன் தான் ஆனாலும் தமிழ்ப்பற்றும் தமிழும் உடம்பில் ஊறியவை அல்லவா ? அதனால்தான் இவ்வளவும் . . . . .


இன்னுமொரு பகிடியையும் சொல்ல வேணும் லண்டனில் இருக்கும் நண்பர் மூலமாக இவருக்கு போன் பண்னினேன் தமிழ் அவருக்கு தெரியாதாம் டொச்சும் அவருக்கு தெரியாதாம் ஆங்கிலம் மட்டும்தான் தெரியுமாம் (+31(0)703934544 ) ????


பதிவர்களே உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்
நன்றி

Read more...

வீரகேசரிக்கு அகவை 77

வீரகேசரி இலங்கையில் இருந்து வெளிவரும் நாளிதழ் ஆகும். கொழும்பு மற்றும் மலையகப்பகுதிகளில் இந்த நாளிதழ் மிகவும்பிரபலமானது. 1930.08.06 புதன்கிழமை அன்று 8 பக்கங்களுடன் தொடங்க்கப்பட்டது. பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகளுடன், அறிமுக எழுத்தாளர்கள் பலருக்கும் களம் அமைத்துக் கொடுத்தத இப்பத்திரிகை 77 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவருகிறது.


இன்றுடன் 77 வருடத்தைப்பூர்த்திசெய்யும் வீரகேசரி மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்

Read more...
Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP