சுஜாதாஞ்சலி

சிறுகதை, நாவல், நாடகம், அறிவியல் கதைகள், அறிவியல் கட்டுரைகள். கவிதைகள், பொதுக் கட்டுரைகள், திரைப்பட கதை வசனம், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் முத்திரை பதித்த திரு சுஜாதா [S.ரங்கராஜன்] நேற்றுக்காலமானார்.அன்னாரக்கு எமது அஞ்சலிகள். ஈழத்தமிழர் பற்றியும் அவர் தப்பான அபிப்பிராயங்களைக்கொண்டிருக்காத மனிதர் அவர்.
இத பற்றி கானாபிரபா அண்ணாவின் வலைப்பூவில் அவருக்கு சுஜாதா வழங்கியபேட்டியில் கேட்டேன் " நம்பிக்கையைத் தளர விடாதீர்கள் " என்ற அவரின் கூற்று இன்னும் மனசில் ஒலிக்கின்றது.

அன்னாரைப்பற்றிய சிறுதுளிகள்

எழுதிய நாவல்கள்
பதவிக்காக
ஆதலினால் காதல் செய்வீர்
பிரிவோம் சந்திப்போம்
அனிதாவின் காதல்கள்
எப்போதும் பெண்
என் இனிய இயந்திரா
மீண்டும் ஜீனோ
நிலா நிழல்

கரையெல்லாம் செண்பகப்பூ
யவனிகா
கொலையுதிர் காலம்
வசந்த் வசந்த்
ஆயிரத்தில் இருவர்
பிரியா
நைலான் கயிறு
ஒரு நடுப்பகல் மரணம்
மூன்று நிமிஷம் கணேஷ்
காயத்ரி
கணேஷ் x வஸந்த்
அப்ஸரா
மறுபடியும் கணேஷ்
வீபரீதக் கோட்பாடுகள்
அனிதா இளம் மனைவி
காந்தளூர் வசந்தகுமாரன் கதை
பாதிராஜ்யம்
24 ரூபாய் தீவு
வசந்தகாலக் குற்றங்கள்
வாய்மையே - சிலசமயம் - வெல்லும்
கனவுத்தொழிற்சாலை
ரத்தம் ஒரே நிறம்
மேகத்தைத் துரத்தினவன்
நிர்வாண நகரம்
வைரம்
ஜன்னல் மலர்
மேற்கே ஒரு குற்றம்
உன்னைக் கண்ட நேரமெல்லாம்
நில்லுங்கள் ராஜாவே
எதையும் ஒருமுறை
செப்டம்பர் பலி
ஹாஸ்டல் தினங்கள்
ஒருத்தி நினைக்கையிலே
ஏறக்குறைய சொர்க்கம்
என்றாவது ஒரு நாள்
நில் கவனி தாக்கு


எழுதிய குறுநாவல்கள்
ஆயிரத்தில் இருவர்
தீண்டும் இன்பம்
குரு பிரசாத்தின் கடைசி தினம்

மெரினா

சிறுகதை
ஸ்ரீரங்கத்துக் கதைகள்

கட்டுரைகள்
கணையாழியின் கடைசி பக்கங்கள்
கற்றதும் பெற்றதும்
கடவுள் இருக்கிறாரா
தலைமை செயலகம்
எழுத்தும் வாழ்க்கையும்
ஏன் ? எதற்கு ? எப்படி ?
சுஜாதாட்ஸ்


திரைப்படமாக்கப்பட்ட இவரின் கதைகள்
காயத்ரி
கரையெல்லாம் செண்பகப்பூ
ப்ரியா
விக்ரம்
வானம் வசப்படும்


நாடகம்
Dr. நரேந்திரநாத்தின் வினோத வழக்கு்
கடவுள் வந்திருந்தார்

திரையாசிரியராக பணியாற்றிய திரைப்படங்கள்
ரோஜா
இந்தியன்
ஆய்த எழுத்து
அந்நியன்
பாய்ஸ்
முதல்வன்
விசில்
கன்னத்தில் முத்தமிட்டால்
சிவாஜி the பாஸ்

சில சுவையான தகவல்கள்
* இறந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் முன்னால் ஜனாதிபதி அப்தூல் கலாமும் ஒன்றாக படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
*சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிகையில் வெளிவந்தது. சுஜாதா திரைக்கதை எழுதிய கடைசி திரைப்படம் சிவாஜி

சுஜாதாவின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு என்பதை மீண்டும் ஒரு முறை சொல்லத் தேவையில்லை.
இப்போதும் சிவாஜி படத்தில் எழுதிய வரி ஒன்று ஞாபகம் வருகிறது
"சாகும் நாள் தெரிந்து போய்விட்டால் வாழும் நாள் நரகமாகிவிடும் "

மற்றவர்களுக்கு எப்படியோ என்னைப்பொறுத்தவரையில் அவர் ஓர் சகாப்தம்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பதற்கமைய போய் வாருங்கள் சுஜாதா!
போய் வாருங்கள் சுஜாதா அறிந்திராத உலகிற்கு !

நன்றி :- WIKIPEDIA

Read more...

திரைப்படங்களில் நடிக்கும் குழந்தைகள் குழந்தை நட்சத்திரமா ? குழந்தைத்தொழிலாளியா ?


<பொதுவாக உலகெங்கும் சிறுவர்கள் வேலைக்கமர்த்துவது தண்டனைக்குரிய குற்றமாகக்கருதப்படுகிறது இத பல்வேறு நாடுகளில் எனோ தானோ என்று கடைப்பிடிக்கப்படுவதால் சிறுவர்களைவேலைக்கமர்த்துவது இன்னும் சட்டவிரோதமாக நடைபெற்று வருகிறது ஆனால் திரைப்படங்களில் நடிக்கும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை எந்தவகையில் கருத்திற்கொள்வது ?

அனேக நடிகர்கள் தாங்கள் பணத்திற்காகவே தாங்கள் நடிப்பதாகக்குறிப்பிடுகின்றனர் அவ்வாறே தமக்குரிய ஊதியம் கிடைக்காவிடில் நீதிமன்றபடியேறவும் தயங்குவதில்லை அதாவது அவர்கள் தாங்கள் செய்த நடிப்பு எனும் வேலைக்கு சம்பளம் பெறுகின்றனர். அதேபோல் திரைப்படங்களில் சிறுவர்களும் குழந்தைகளும் நடிக்கின்றனர் ஆகவே அவர்களும் தொழிலாளர்கள் தானே ? இதைப்பற்றி யாராவது சிந்திருப்பார்கள் தானே அவர்கள் ஏன் மெளனமாக இருக்கின்றனர்.என் மனதுக்குப் பட்டது போல் அவர்களுக்கும் தோன்றியிருக்கலாம்!ஆனால் இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட கருத்து! , என்னுடையகருத்துக்களை அவாகள் ஆதரிக்கலாம், சிலர் மறுக்கலாம் தவறொன்றுமில்லை வேறு வேலைகளுக்கு சிறுவர்கள் கொண்டுசெல்லப்பட்டால் சிறுவர் துஷ்பிரயோகம் அது இது எனக்கத்தும் இவர்கள் ஏன் இதைக்கண்டுகொள்கிறார்களில்லை என்பது குழப்பமாகவே இருக்கிறது.

அனேகமாக திரைப்படங்களில் நடிகர்கள் நடிகைகள் சரியாக நடிக்காதவிடத்து அவர்களுக்கு பேச்சு விழுவதாகவும் சிலநேரங்களில் அடியும் ! விழுவாதகவும் அவர்கள் பத்திரிகைப்பேட்டிகளில் குறிப்பிடுகின்றனர் அதேபோல்தான் சிறுவர்கள் சரியாக நடிக்காதவிடத்தும் அவர்கள் மீதும் அதே கொடுமைகள் நடக்கலாம் தானே ? அப்படி நடக்காதென்பதற்கு ஏதாவது உத்தரவாதம் இருக்கிறதா ? இப்போ பாடசாலைகளிலோ வேறு இடங்களிலோ சிறுவர்களைத்துன்புறத்தினால் அது சிறுவர் துஷ்பிரையோகமாகக்கருதப்படுகிறது !அவ்வாறிருக்கையில் திரைப்படங்களில் நடிக்கும் சிறுவர்கள் நிலை ?

சரி திரைப்படங்களில் சாதாரணமாக நடிக்கவைத்தால் பரவாயில்லை சில திரைப்படங்களில் குழந்தைகள் இறப்பதுபோலவும் அங்கவீனமாக்கப்படுவது போலவும் (சிலநேரங்டகளில் நெருக்கமான காட்சிகளிலும் )காட்டப்படும்போது அக்குழந்தையைப்பெற்ற தாய் அல்லது தந்தை அதை எவ்வாறு எடுத்துக்கொள்வார்கள் ? உதாரணத்திற்கு அழகியதமிழ்மகன் திரைப்படத்தில் குழந்தை இறந்து இறுதிக்கிரியைகள் நடப்பது போல் காண்பிக்கப்படும் இவ்வாறான் காட்சிகளைப்பார்க்கும் எங்களாலேயோ தாங்கிக்கொள்ளமுடியவில்லை அக்குழந்தையின் மீது அதிகபாசம் வைத்திருகும் வேறு யாராவது பார்த்தால் அவர்கள் நெஞ்சம் படும பாடு யார் அறிவார் ?

சரி குழந்தைகள் தொழிலாளர்கள் இல்லை என்ற பார்வையில் இருந்து விலகி வேறுகோணத்தில் அதாவது கலை என்ற கோணத்தில் பார்த்தால் அவர்களை மரணம் தொடர்பான காட்சிகளைத்தவிர்த்து நடிக்கவைக்கலாம் தானே ?
திரைப்படத்துறையினரே மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கெதிராக வாய்கிழியக்கத்துபவர்களே ஓர்நிமிடம் ! திரைப்படத்துறையில் குழந்தைத்தொழிலாழர்களின் இன்றைய நிலை மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறதே என்னது தான் என் எண்ணம் . இவன் யார் நம்மைச் சொல்வதற்கு என நினைக்க வேண்டாம். நினைத்தாலும் மகிழ்ச்சி. நினைக்காமல் இருந்தால் சந்தோசம்.

நன்றிகளுடன்
மாயா

Read more...

தமிழ்ப்புத்தாண்டு தைமாதமல்ல சித்திரை மாதமே !

"தைப்பொங்கல் தினமே தமிழர்களின் புத்தாண்டு தினம் " என்ற தமிழகமுதல்வரின் அறிப்பு தொடர்பாக தமிழகத்தைச்சோந்த பலராலும் ஆமோதித்தும் எதிர்ததும் வலைப்பதிவில் எழுதப்பட்ட ஒன்று. சித்திரைபபபுதுவருடமென்றால் சிறுவர் முதல் பெரியோர் வரை மனதைக்குதூகலப்படுததும் ஆனால் 2008 தைமாதம் பிறந்தவுடன் தைப்பொங்கல் தினமே தமிழர்களின் புத்தாண்டுதினம் என்ற தமிழகமுதல்வரின் அறிவிப்பு பலரது மனதைச்சஞ்சலப்படுத்துவதாயிருந்தது. பண்டைக்காலம் முதல் தைப்பொங்கல்தினத்தை உழவர்திருநாளாக கொண்டாடிவந்த தமிழ்மக்கள் சித்திரை மாதப்பிறப்பை தமிழ்ப்புத்தாண்டாகக்கொண்டாடி குதூகலித்துவந்தனர். இதை மாற்றியமைக்கும் வகையில் தமிழ்ப்புத்தாண்டு தைப்பொங்கல்தினமே என்ற அறிவித்தல் பல சர்ச்சைகளை உருவாக்குகிறது
நான் அறிந்தவகையில் தைப்பொங்கலை புத்தாண்டாக கொண்டாடினால் அதன் நோக்கம் மாற்றப்பட்டுவிடும் என்பது மறுக்கமுடியாத உண்மை மற்றும் உழவரைப்பொறுத்தவரை அறுவடைக்காலமே குதூகலமான காலமாகும் உழவர்கள் இருவகையாகப்பயிர்செய்வர் சிலர் ஆடி மாதத்தில் விதைவிதைத்து தைமாதத்தில் அறுவடைசெய்வர் இன்னோர் சாரார் ஐப்பசியில் விதை விதைத்து பங்குனியில் அறுவடை செய்வர் ஆகையால் இரண்டாவத வகையினருக்கு தைமாதம் சாதாரணமாக சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாகவே முடியும். ஆனால் இரசாராரதும் அறுவடை முடிந்து வீடு வாசலில் நெற்குவியல்களை அழகுபார்த்து மனம் பூரித்து நிற்கும் தருணம் கையில் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும் அப்போது தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து மகிழ்வர் இதன்படிசித்திரைமாதத்தில் வரும் புதவருடமே இவர்களுக்கு மனநிறைக்கொடுத்து நிற்கிறது தைமாதத்தில் வரும் பொங்கல்தினம் உழவர்தினமாக இருந்தாலும் அறுவடை ஆரம்பித்து அது தொடர்பான வேலைகள் நடைபெறும் நாள் அதனால் அவர்களால் சிலவேளைகளில் தைமாதத்தில் வரும் பொங்கல் தினத்தைக்கூட கொண்டாட முடியாமல் போகலாம் இந்நிலையில் தைப்பொங்கல் திருநாளை எவ்வாறு அவர்கள் புத்தாண்டு தினமாக மனநிறைவோடு கொண்டாடுவர் ?


இலங்கையைப்பொறுத்தவரை இது ஒரு பொதும் சாத்தியப்படாது ஏனெனில் இலங்கையில் தமிழ்மக்கள் சிங்களமக்கள் என இருசாராரும் சேர்ந்து கொண்டாடுகின்றனர் .அது தமிழ்சிங்களப்புத்தாண்ட என்றே சொல்லப்படுகின்றது சித்திரைப்புத்தாண்டின் அம்சங்கள் தமிழ்மக்கள் மற்றும் சிங்களமக்களுக்கு ஒன்றாகவே அமைகிறது வருடப்பிறப்பு கருமங்கள் யாவும் இருமொழியினருக்கும் ஒருமைப்பாட்டைக்கொண்டது, இருமொழியினரின் பஞ்சாங்கக்கணிப்புக்களும் சித்திரைப்புத்தாண்டை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகின்றன அந்தவகையில் சித்திரைமாதமே இரு சமூகத்தவர்களுக்கும் உகந்த சித்திழைப்புத்தாண்டாக மலர்கிறது.

சோதிடக்கணிப்பின்படி மேடலக்கினமே தமிழர்களின் இலக்கினமாகும் அந்த லக்கினத்தில் சூரியன் உச்சம் பெறுவது சிறப்பானது அத்துடன் சூரியன் மேட இராசிமாதமான சித்திரை மாதத்தில் காலடி எடுத்து வைக்கும் போது அந்த சூரியனை போற்றி வழிபட்டு வருடப்பிறப்பை கொண்டாடுவது மிகவும் உயர்வைத்தரக்கூடியது
தைப்பொங்கல் நாளை உழவர்திருநாளாகக்கொண்டாடலாமே அன்றி தமிழர்களின் புத்தாண்டுதினம் என்கொண்டாடுவத அவ்வளவு நல்லதல்ல.

ஆனாலும் ஒன்று , சித்திரைப் புத்தாண்டானது, ஆரியர்களினுடைய கலாச்சாரப்பின்ணனியின் பின்பற்றலான இந்து மதத்தின் ஒரு அங்கம். சித்திரைப்புத்தாண்டு எமது கலாச்சாரத்தில் இடையில் வந்து ஒட்டிக்கொண்டதா...??? இல்லை, தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வருகின்றதா...? எதாவது ஆதாரங்கள் உண்டா...??

இதைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள்

Read more...

மனிதன் எவ்வாறு உருவானான் ?இது விஞ்ஞானத்தின் கேள்வி (ஒருவேளை கடவுள் தான் ஆரம்பகர்த்தாவா ?)

சுமார் பல மில்லியன் ஆண்டுகளின் [ 35 கோடி வருடங்களின் முன்தோன்றியதாக விஞ்ஞானிகள் சொல்கின்றனர் ] முன் தோன்றிய ஒருகல அங்கியிலிருந்து [Unicellular ]வந்த கூர்ப்பின் பரிணாம வளர்ச்சியினால் அவையேபடிப்படியாக பலகலங்களாக மாறி பல்வேறு மிருகங்களாகி பின் மனிதர்களாக மாறின. இது விஞ்ஞான ரீதியான முடிவு அது பற்றிய சிறியதொரு கற்பனைச்சித்திரம் கண்ணொளியாக உங்களுக்காக. [இந்தக்கண்ணொளியில் காட்டப்படுபவை யாவும் உண்மையானவை இல்லை கற்பனை]

சரி இப்போ விடையத்திற்கு வருவோம் கடவுள் இல்லை கடவுள் இல்லை என்று சொல்கிறீர்களே உங்களிடம் விஞ்ஞான ரீதியாக ஓர் கேள்வி
* மனிதன் எவ்வாறு தோன்றினான் ?
குரங்கிலிருந்து
* குரங்கு எவ்வாறு தோன்றியது ?
கடலிலிருந்து வந்த ஈருடகஅங்கிகளின் கூர்ப்பின் மூலம்
* சரி ஈரூடக அங்கிகள் ?
நீர் வாழ் அங்கிகளின் கூர்ப்பிலிருந்து
* நீர் வாழ்அங்கிகள் ?
பலகோடி ஆண்டுகளின் முன்தோன்றிய ஒருகல அங்கிகளின் மூலம் . . .

* சரி அந்த ஒருகல அங்கிகள் எங்கிருந்து வந்தன ?

யாருக்காவது பதில் தெரியுமா (விஞ்ஞான ரீதியாக ) தெரிந்தால் தர்க்கம் புரியாமல் சொல்லுங்கள் பார்க்கலாம்

Read more...
Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP