தொலைந்துபோன என் வலைப்பதிவு - உதவி தேவை

வணக்கம் அன்பிற்க்குரிய நண்பர்களே!
நீண்ட காலத்தின் பின் ஓர் பதிவு அதுவும் வலைப்பதிவொன்றை இழந்த சோகத்தோடு!..

ஆமாம் நண்பர்களே எனது பிரதானமான வலைப்பதிவான "மாயாவின் பதிவுகள் " என்ற வலைப்பதிவு இன்று காலையிலிருந்து இல்லாமல் போய்விட்டது! ( உண்மைத்தமிழன் அவர்களது வலைப்பதிவும் காணமல் போன சம்பவம் இதே நேரத்தில் நிகழ்ந்திருக்கிறது) இது தொடர்பாக Google நிறுவனத்திற்க்கு தகவல் அனுப்பியபோது அவர்கள் கீழ்க்கண்டவாறு பதிலை கொடுத்திருந்தனர்
Blogger's spam-prevention robots have detected that your blog has characteristics of a spam blog. (What's a spam blog?) Since you're an actual person reading this, your blog is probably not a spam blog. Automated spam detection is inherently fuzzy, and we sincerely apologize for this false positive.

We received your unlock request on December 1, 2009. On behalf of the robots, we apologize for locking your non-spam blog. Please be patient while we take a look at your blog and verify that it is not spam.
எனது அந்தப்பதிவு 3 வருடங்களுக்கு மேலாக எந்தவித பாதிப்புக்களுமின்றி முந்நூறிற்க்கும் அதிக பதிவுகளுடன் இயங்கி வந்தது. நேற்றுப்பார்க்கும்போது malware தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக இருந்தது. இன்று முழுவதும் இல்லாமல் போய்விட்டது. காரணம் நான் போட்டிருந்த திரட்டிகளின் கருவிப்பட்டை நிரல்களாலும் இருக்கலாம் என நினைக்கிறேன்....

ஆனாலும்...

என் பதிவை நான் கடந்த ஒருவருடமாக Backup செய்திருக்கவில்லை.. அப்படியானால் போனது போனது தானா ? இல்லை ஏதாவது செய்யமுடியுமா ? ? ?
யாராவது சொல்லுங்களன்

மீண்டும் அவ் வலைப்பதிவில் வலைபதிய முடியுமா ? ??

நண்பர்களே! என் மற்றைய வலைப்பதிவுகளை Backup எடுக்க விரும்புகிறேன் யாராவது சிறந்த முறையைக் கூறினால் என் மற்றைய வலைப்பதிவுகளை காப்பாற்றுவேன்..

நன்றிகளுடன்
மாயா

Read more...

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு


வணக்கம் நண்பர்களே,
இலங்கையில் பதிவர்சந்திப்பை இரண்டாவது தடவையாகவும் நடாத்தவேண்டும் என்கின்ற எம் அனைவரதும் ஆசை நிறைவேறப்போகின்றது.

இடம் : கைலாசபதி கேட்போர் கூடம்
தேசிய கலை இலக்கியப் பேரவை,
தலைமைப் பணிமனை
571/15, காலி வீதி,
வெள்ளவத்தை,
கொழும்பு-06

காலம் : மார்கழி பதின்மூன்று, மாலை இரண்டு மணி, ஞாயிற்றுக் கிழமை ( 13-12-2009 )

நிகழ்ச்சி நிரல்
  • அறிமுகவுரை
  • புதிய பதிவர்கள் அறிமுகம்
  • கலந்துரையாடல் 1 : பயனுறப் பதிவெழுதல்
  • கலந்துரையாடல் 2 : பின்னூட்டங்கள் குறித்தான பார்வை
  • சிற்றுண்டியும் சில பாடல்களும்
  • கலந்துரையாடல் 3 : இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமம்
  • கலந்துரையாடல் 4 : பெண்களும் பதிவுலகமும்
  • பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி
  • உங்களுக்குள் உரையாடுங்கள்
பதிவர்கள் தங்கள் வருகையை இங்கே சென்று பதிலிடுவதன் மூலமோ, தெரிந்தால் அமைப்புக்குழுவினரில் ஒருவருக்கு தொலைபேசியோ, நேரிலோ அல்லது ஏதோ ஒரு வழியிலோ தெரிவித்தால் நலம்பெறும்.

எம்மால் எமக்காக நடாத்தப்படும் இந்தச் சந்திப்பை சிறப்பாக நடாத்த பதிவர்கள் குறைந்தது நூறு ரூபாய்களாவது கொடுத்து சிறப்பாக நடாத்துங்கள்.

இந்தப் பதிவர்சந்திப்பு நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும். அதன் சுட்டி இதோ !

இம்முறை அமைப்புக் குழுவினர்
கனககோபி, சம்யுக்தா, மன்னார் அமுதன், மதுவர்மன், மதுவதனன், சுபாங்கன், மு மயூரன்

இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.

மேலதிக தகவல்களை இங்குசென்று பெற்றுக்கொள்ளலாம்... =>




Read more...

வேண்டுகோள்- பதிவர் சிங்கை நாதனுக்காக...

உலகெங்கும் இருந்து உதவிக்கொண்டிருக்கும் நல்ல உள்ளங்களின் உதவியால் நமது தேவையில் பெரும்பான்மையை அடைந்துவிட்டு மிகக் குறைந்த அளவு தொகைக்காக காத்திருக்கிறோம். மீகுதித் தொகையையும் அடைய அன்புடன் உதவுங்கள்.

தற்போது செந்தில் அண்ணண் நன்கு தேறி வருகிறார். உலகெங்கிருந்தும் அவருக்காக பிரார்திக்கும் அத்தனை அன்புள்ளங்களுக்கும் நன்றிகள்.

இதோ அது குறித்து நர்சிம் அண்ணா எழுதிய பதிவு.

200 அடிப் பள்ளத்தை எப்படித் தோண்டப்போகிறோம் என்று நினைத்துக்கொண்டிருக்காமல் ராஜாவும் ஜோசப்பால்ராஜும் தோண்டத்துவங்கியவுடன்,மொத்தப் பதிவுலகமும் கை கோர்த்தது.விளைவு...170 அடி தோண்டியாகிவிட்டது. தோண்டியபள்ளத்தின் மணல்மேட்டில் அமர்ந்து நகம் கடித்துக்கொண்டிருக்கிறோம்.மீதமிருக்கும் 30 அடிகள் மிக முக்கியம். நீர் ஊற்று போல் மகிழ்ச்சி பொங்க இந்த இறுதி 30 அடிகள் தோண்டத் திராணி இல்லாமல் அமர்ந்திருக்கிறோம்.

இதுவரை உதவிய அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி சொல்லிக்கொள்ளும் இதே தருணத்தில்...

ச்சே,உதவியிருக்கலாம் பிஸியாக இருந்துவிட்டோம் அல்லது சம்பளம் வாங்கியதும் உதவலாம் என்றிருந்தவர்களே...உங்களின் இந்த ஸ்லாக் ஓவர் ரன்கள் மேட்ச் வின்னிங் ரன்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஓர் இதயத்தின் துடிப்பில் பாதிப்பு என்றவுடன் பல்லாயிரம் இதயங்களின் துடிப்புகளின் படபடத்த பச்சைக் காகிதங்கள் சிங்கைநாதனின் மூச்சை சீராக்கியிருக்கிறது.முதல் கட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாய் முடிந்து விட்டதும் ஜோசப்பின் பதிவின் மூலம் அறிந்திருப்பீர்கள்(அது முதல் கட்ட அறுவை சிகிச்சையே..)

ஆம்...

உதவ நினைத்து,உதவ மனம் இருந்தும் பிஸியாக இருந்தவர்கள்...இன்னமும் ஒரு வாரத்திற்குள் உதவினால் உதவியாய் இருக்கும்,இறுதி கட்ட அறுவைசிகிச்சைக்கு.

சிங்கை நாதன் குறித்த அடுத்த பதிவை சிங்கை நாதனே இனி எழுத வேண்டும் என்ற பிராத்தனைகளுடனும் வேண்டுகோளுடனும்...

அனைவருக்கும் நன்றி.

1] ICICI Account Details
Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore

2] Singapore Account Details
Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings

ராஜாவின் தொலைபேசி :+966 508296293
நண்பர் கருணாநிதி செல்பேசி எண் : +65 93856261

சிங்கப்பூர்
கோவி.கண்ணண் -‍ +65 98767586
குழலி - +65 81165721
ஜோசஃப் பால்ராஜ் - +65 93372775

அமெரிக்கா
இளா - +1 609.977.7767

இந்தியா
நர்சிம் - +91 9841888663

அமீரகம்
ஆசிப் மீரான் - +971 506550245

சவுதி அரேபியா
ராஜா - +966 508296293


மேலதிக தகவல்கள்....

நன்றிகளுடன்
மாயா


Read more...

புதிய அத்தியாயத்தைத் தொடக்கவிருக்கும் இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு

காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9 மணி.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்.

குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும்.. (வழமையான கொழும்பு நேரம் என்று தப்பாக நினைத்து யாரும் தயவு செய்து 9.30க்கு பிறகு வரவேண்டாம் என்று முன்னெச்சரிக்கை செய்யப்படுகிறது)


நிகழ்ச்சி நிரல்
  • அறிமுகவுரை
  • பதிவர்கள் அறிமுகம்
  • வலைப்பதிவு ஒரு முன்னோட்டம்
  • திரட்டிகள்
  • சிறப்பு அதிதி உரை
  • இடைவேளை
  • வலைப்பதிவு தொழில்நுட்பங்கள்
  • வலைப்பதிவும் சட்டமும்
  • பதிவுலக அனுபவங்கள்
  • எதிர்காலத் திட்டங்கள்
  • கலந்துரையாடல்
  • நன்றியுரை

Read more...

பதிவர் சிங்கை நாதனுக்கு உதவுங்கள் - Very Urgent

சக பதிவரும் சிங்கப்பூரில் வசிக்கும் திரு. செந்தில் நாதன் (வலைப்பதிவில் சிங்கை நாதன்) கடந்த 2005ம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.இப்பொழுது மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் டாலரில் 100,000 வரையில் தேவைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது

அது தொடர்பான பதிவு கே.வி.ஆர் அண்ணனின் வலைப்பதிவிலிருந்து தொடர்கிறது...
இப்பொழுது மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் டாலரில் 100,000 வரையில் தேவைப்படும் என்று எங்களது கல்லூரி மடல்குழுவுக்கு மின்னஞ்சல் எனது வேறொரு நண்பர் மூலமாக வந்திருக்கிறது.

ஓரிவரின் தனிப்பட்ட உதவி கண்டிப்பாக போதாதென்பதால் சக பதிவர்களான உங்களிடமும் நண்பன் செந்தில்நாதனுக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் மடிப்பிச்சை கேட்கிறேன். செந்திலுக்கு உதவ நினைப்பவர்கள் கீழ்கண்ட அக்கவுண்ட்டுகளுக்கு தங்களால் இயன்ற பணத்தை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ICICI Account Details

Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore

Singapore Account Details

Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings

Western Union மூலமாக பணம் அனுப்புபவர்கள் பணத்தை அனுப்பிவிட்டு அனுப்பியவர் பெயரையும் Money Transfer Control Number (MTCN)யும் karunanithi.muthaiyan@credit-suisse.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்

Paypal details as follows:

e-mail id: rajan.sovi@gmail.com
Then choose the currency
Then choose the reason for transfer- if possible add a note "Senthil's treatment".

பணத்தை அனுப்புபவர்கள் Transaction Remarksல் “To Senthilnathan" என குறிப்பிடும்படியும் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பதிவைப் படிக்கும் சக பதிவுலக நண்பர்களும் முடிந்தால் உங்களது பதிவிலும் சிங்கை நாதனுக்கு உதவுமாறு பிற பதிவர்களை அழைக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

Update: ஒவ்வொருவரும் தனித்தனியாக பணம் அனுப்புவதில் சிக்கல்கள் இருப்பதால் குறிப்பிட்ட நாடுகளில் ஒரு சில நண்பர்கள் மொத்தமாக பணத்தை வசூலித்து அனுப்புகிறோம். அவர்களது பெயர் மற்றும் தொடர்பு எண்ணையும் கீழே கொடுத்துள்ளேன். நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

மேலதிக செய்திகள் : கே.வீ.ஆர் பக்கங்களில்...

நன்றி : கேவீஆர் பக்கங்கள்

இலங்கைப்பதிவர்களுக்கான குறிப்பு :-
சக வலைப்பதிவர் சிங்கை நாதன்
இதய நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் டாலரில் 100,000 வரையில் தேவைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. அவரின் இவ் வைத்தியச் செலவுகளுக்கான உதவிகளை சக பதிவர்கள் உலகெங்குமிருந்து உதவி வருகின்றனர்.

23ம் திகதி இலங்கை பதிவர் ஒன்றுகூடல் நடைபெற இருக்கும் அந்நாளில் இலங்கைப்பதிவர்கள் அனைவரும் தங்களால் இயன்றளவு தொகையை அன்றே திரட்டி
சிங்கை நாதன் அவர்களுக்கு அனுப்பினால் நல்லது. இதை ஏற்பாட்டுக்குழுவிலுள்ள யாரேனும் செய்யலாம். இன்றுவரை அவருக்கு தேவையான பணத்தேவையில் அரைப்பங்கு தான் சேர்ந்துள்ளது. எனவெ நண்பர்களே வரும் 23ம் திகதி இது தொடர்பாகவும் கலந்துரையாடுங்கள் நிதியைச் சேருங்கள். நண்பர் விரைவாக நலம்பெறப் பிரார்த்தியுங்கள்.

அறுவை சிகிச்சைக்கு பெரும் பொருளுதவி தேவைப்படுகிறது, பதிவர் நண்பர்கள் இயன்றதை அளித்தும், நீங்கள் அறிந்த சேவை அமைப்புகளிடம் பேசி பொருளுதவி பெற்றுத் தந்து நம்மில் ஒருவரான நண்பர் சிங்கை நாதனின் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவ வேண்டும்.

நீங்கள் தருவது எவ்வளவு குறைவாக இருந்தாலும் கொடுங்கள்.

சிறுதுளி பெருவெள்ளமென உணர்த்துவோம்

இலங்கை வலைப்பதிவர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றிகளுடன்
மாயா

Read more...
Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP