கிறிஸ்மஸ் கால நினைவுகள்

கிறிஸ்த்துமஸ் வரப்போகுதெண்டால் சின்னனுகளுக்கு மட்டுமில்லை பெரியவர்களுக்கும் ஒரே கொண்டாட்டம் தான். பின்ன எங்களைப்போல அவர்களுக்கு [கிறீஸ்த்தவர்களுக்கு] வருடம் முழுவதும் பண்டிகைகள் இல்லை தானே.

யாழ்ப்பாணத்து கடைத்தெருக்களெல்லாம் தள்ளுபடி விற்பனைகளும் கூட்டங்களும் குவியத் தொடங்கி வர்ணவிளக்குகளுடன் களைகட்டத் தொடங்கிவிடும் கிறிஸ்மஸ் தினத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே கண்களைப் பறிக்கும் அலங்காரங்களுடன், யாழ்ப்பாணம் அமர்க்களப்பட ஆரம்பித்து விடும் தெருவிலுள்ள ஒவ்வொரு கடையும் போட்டா போட்டி போட்டுக் கொண்டு பிரமிப்பூட்டும் வகையில், அலங்கார வேலைகள் செய்திருப்பார்கள் அது கடைகளுக்கு புது பொலிவையும், அழகையும் கொடுக்கும் ஆங்காங்கே கிறிஸ்மஸ் தாத்தா அமர்ந்து கொண்டு குழந்தைகளுடன் வியைளாடிக்கொண்டுமிருப்பார்.

நான் கிறீஸ்த்தலப்பாடசாலையில் படித்ததாலோ என்னவோ நண்பர்களில் அனேகர் கிறீஸ்த்தவர்கள் எனவே கிறிஸ்த்துமஸ் என்றால் எனக்கும் ஒர் பெருநாள் தான் கிறிஸ்த்துமஸ் மரங்களை அலங்கரிப்பதுவும் , இயேசு பிறப்பின் மாட்டுத்தொழுவக் காட்சிகளை காட்சிக்கு வைப்பதும் எனக்கு மிகவும் பிடித்தவையாகும். கிறிஸ்த்துமஸ் காலமென்றால் நான் படிச்ச யாழ் பரி யோவான் கல்லூரியில் {கிறிஸ்த்தலப்பாடசாலை தானே }பெரிய அமளியாயிருக்கும் மரத்தைசோடிக்கிறது சுற்றுப்புறங்களை சுத்தப்படுத்தி அலங்காரப்படுத்துவது என களைகட்டும் . இவற்றுள் நான் பொதுவாக தலை வைப்பதில்லை ஏனெனில் எனக்கு மட்டுமன்றி என்போன்ற பலருக்கு கிறிஸ்த்துமஸ் காலத்தில் அடைக்கலம் தருவது என் வீட்டின் அருகாமையிலிருக்கும் சிறுவயது முதல் ஒன்றாய்த்திரிந்த நண்பன் கனி வீடுதான் கிறிஸ்த்துமஸ் நாளுக்கு முதல்நாளும் அடுத்த நாளும் எமது பொழுது அங்கேயே கழியும் { என்ன பகீ ஞாபகமிருக்குதே ? }

கிறிஸ்துமஸ் நாளுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் கிறிஸ்துமஸ் மரம் ஒன்றை வீட்டில் அழங்கரிப்பதோடு கிறிஸ்துமஸ் கொண்ட்டாங்களை கிறிஸ்தவர்கள் ஆரப்பிப்பது வழக்கம். மரத்தின் அருகில் குடில் போல் அமைத்து இயேசு பிறப்பின் மாட்டுத்தொழுவக் காட்சிகளை காட்சிக்கு வைப்பதும் வழக்கம் அதற்காக தூங்கும் பொம்மைகள் இருக்கும் பெட்டிகளை எடுத்து பத்திரமாக கீழே இறக்குவது ஒரு சுவாரசியமான வேலை. அவ்வாறு அவற்றை இறக்கும் பொழுது தான் சென்ற வருடம் செய்தவையெல்லாம் மனதில் ஓடும் இறக்கியவற்றை கழுவி காயவைத்து விட்டு வேண்டிய சவுக்கு மரங்களை வெட்ட பத்துப்பதினைந்து பேர்வரையில் கிளம்புவோம் சில நேரங்களில் அருகிலிருக்கும் தெருக்களிலே வேலைமுடிந்துவிடும் சிலநேரங்களில் எங்கள் கஷ்ட காலமெனில் வல்லிபுரம் கோவில் வரை செல்வதும் உண்டு [பிற் காலங்களில் அவ்விடம் போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டிருந்ததால் ஊர்காவற்துறைப்பக்கமாக செல்லநேர்ந்தது]

வெட்டிக்கொண்டுவரும் மரங்களைக்கத்தரித்து ஒருவழியாக கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கப்படும் பின்னர் கலர் பல்புகளை தொங்கவிட்டு , அன்ன பிற பொருட்களையும் தொங்கவிட்டு விளக்குகளை எரியப்பண்ணும்போது இரவு 9.30 ஐத் தாண்டி விடும் அப்படியே வீட்ட வந்து சாப்பிட்டு விட்டு மறுபடி . . . .

இரவு பாடசாலை நண்பர்களுடன் பாசையூர் (பாசையூர் குருநகர் , அரியாலை போன்ற இடங்களில்
மற்ற இடங்களை விட கிறிஸ்தவ மக்கள் கொஞ்சம் அதிகம்)அந்தோனியார் கோவில் நத்தார் நள்ளிரவுப் பூசைத்திருப்பலிக்குப் போனால் அங்கே கோவில் ஒரே தீப அலங்காரமாய் ஜொலிக்கும்வாறவங்களும் புது உடுப்புங்களோட வந்திருப்பார்கள் ( நாங்க அதைப்பார்க்கத்தானே போறது ) பதினோன்றரை மணியிலிருந்து கரோல் கீதங்கள் பாட ஆரம்பித்து பாட்டும், பிரசங்கமுமா மாறி மாறி நடந்து . சரியா 12 மணி அடிச்சவுடனே 'மெர்ரி கிறிஸ்மஸ்' வாழ்த்துக்களும், சிறப்புப் பிரசங்கம், கிறிஸ்மஸ் பாட்டுக்கள் என்று கோலாகலமாக நடந்து முடியும் முடியவிட்டு அப்படியே ஊரெல்லாம் திரிந்து விட்டு வெடிகளைக் கொழுத்தி அமர்க்களப்படுத்திக்கொண்டு அடுத்த நாள் தான் வீடு திரும்புபோம் [அதுவரை சைக்கிள்ள ஊர்மேயுறது தான்]. மார்காழி மாத நிலவு பனை இடுக்குகளினூடு தெரியும் . அன்று தான் என்னவோ புதிய நிலவை பொழிவது மாதிரி இருக்கும் . நடுநிசியும் ஆயிட்டுது..... ஊர் என்னும் உறங்கவில்லை உறங்கப்போவதுமில்லை ஆங்காங்கே தூரத்தில் கிறிஸ்மஸ் பாப்பா சகிதம். கூட்டம் கூட்டமாய் வேதக்கார வீடுகளுக்கு சென்று..பாடல்கள் மூலம். கிறிஸ்து பிறந்த செய்தியை அறிவித்து கொண்டு இருப்பார்கள் [2000 வருசமாய் அறிவித்து கொண்டிருக்கிறார்களாம்..]

மறுநாள் கிறிஸ்மஸ் தினமன்று எல்லா கிறீஸ்த்தவ நண்பர்கள் வீடுகளிலுமே தடல்புடலாகச் சமையல் நடப்பதுண்டு. ஆகவே அவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு , அவர்களது விஷேஷ கவனிப்புகள் வயிற்றை நன்றாகவே நிரப்பி விடும், இதனால் வீட்டுச் சமையல் கேட்பாரற்றுக் கிடப்பதுமுண்டு . வீடு திரும்பும்போது அம்மா சமைத்ததை உள்ளே தள்ள முடியாமல் திணற, அம்மாவின் திட்டுக்களை சம்பாதித்ததும் இந்த நத்தார் காலத்தில்தான். . . .
இங்க ஒன்றைச்சொல்ல வேணும் நாங்க A/L படிக்கத்தொடங்குற காலத்தில தான் வெடிகள் யாழ்ப்பாணத்திற்கு வந்தன அதனால் திருநாட்களில் வெடிகள் கொழுத்துவது பெரும் குஷியைக் கொடுக்கத் தவறுவதில்லை.அதனால் தான் என்னவோ ஒருவரிடமும் அடியோ பேச்சோ வாங்குவதில்லை.

பதிவர்களே
யேசுவைச் சிலுவையில் அறைந்து கொன்றார்கள். ஆனால் அவர் வருடாவருடம் தேவபாலனாய் அவதரித்து எம்மைக் களிப்பூட்டியபடிதானே இருக்கின்றார்? அப்படியானால் மரணித்து விட்ட என் நண்பர்கள் எப்பொழுது மீண்டும் ஜனிக்கப் போகின்றார்கள்
எனக்கு விடை தெரியவில்லை.
பி.கு : கடந்த வருட பதிவுகளில் எடுக்கப்பட்ட மீள் பதிவு

Read more...
Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP