வடக்கின் மாபெரும் போர் ஆரம்பம்



வடக்கின் மாபெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரிக்கும் சென் ஜோன்ஸ் கல்லூரிக்குமிடையிலான 102 வது தடுப்பாட்டம் ஆரம்பமாகியது முந்தியெல்லாம் ஆட்டமும் பாட்டுமாய் யாழ்ப்பாணம் விழாக்கோலம் பூணடிருக்கும் ஆனால் இந்தமுறை நடக்கிறதெ பெரிய சாதனைகோல தான் கிடக்கு !
இதே போல இலங்கையின் தலைநகர பாடசாலைகளான சென் தோமயனும் றோயல் கல்லூரி இடையிலான போட்டியும் தற்பொது நடைபெறுகிறது இப்போட்டியை 1879 ஆண்டிலிருந்து தொடர்ந்து நடத்தி வருகிறார்கள் [ இம்முறை 129வது போட்டி ]
படங்களின் மேல் சொடுக்கினால் பெரிதாகும்

Read more...

சுஜாதாவின் மறைவும் தமிழ்மணத்தில் பதிவர்களின் கூத்தும்


சுஜாதா [S.ரங்கராஜன்] என்ற ஓர் மாபெரும் எழுத்தாளன் தன் 73ம் வயதில் அமைதியாக விண்ணுலகம் அடைந்தபின் , தமிழ்மணம் உட்பட பலதிரட்டிகளில் அன்னாருக்கு அஞ்சலி செலுத்துமுகமாக அஞ்சலிகளும், அவரின் வாழ்க்கை தொடர்பான சுவையான பதிவுகளும் வெளிவந்தன அதைவிட அதிகமாகவந்ததென்னவோ அவருக்கு எதிராகத்தான். குறிப்பாக அஞ்சலி செலுத்தியவற்களுக்கெதிராக எதிர்த்துப் பதிந்த பதிவுகளும் சுஜாதாவின் மரணம் சரியானதே ! என்றும் , சாதிரிதியாக பல பதிவுகளும் வந்திருந்தன .

இதையிட்டு எனக்கு மனக்கவலை ஏற்பட்டிருக்கவேண்டும் ஆனால் அவ்வாறானவர்களை நினைத்து சிரிப்புத்தான் வந்தது குறிப்பாக சாதி ஒழியவேண்டும் என வாய்கிழியக்கத்துபவர்கள் கூட அவரது சாதிப்பெயரை சந்திக்கிழுத்து வாதம் பரிந்தனர் . அப்படி அவர் செய்த தவறென்ன ? என்னைப்பொறுத்தவரை சாதி ஒழியவேண்டும் என கூறுபவர்கள் மத்தியில் அவர் பிராமணராகப்பிறந்தது தான் அவர் செய்த தவறு ! நம் மனத்தில் தோன்றும் கருத்துக்களை எழுதுவதற்கே நாம் பதிவெழுதுகிறோம் அந்தவகையில் தான் அந்த மாபெரும் எழுத்தாளனுக்கு அஞ்சலி செலுத்தினோம். ஆனால் இங்கே பதிவுகளைப்பார்த்தபோது பலர் அதில் மகிழ்ச்சியடைந்தமாதிரித்தான் தெரிகிறது உங்களிடமே கேட்கிறேன் உங்கள் நெருங்கிய சொந்தம் ஒருவருடைய மரணவீட்டில் வந்து கும்மாளம் அடித்தாலோ அல்லது அவரைப்பற்றி குறைசொன்னாலோ தாங்கிக்கோள்ளமுடியமா ? அல்லது மரணம் எல்லோருக்கும் பொதுவானது தான் அதற்காக ஏன் அழுகிறீர்கள் சிரியுங்கள் என்று சொல்லமுடியுமா ? எந்த ரோஷமுள்ள மனிதனாலும் தாங்கிக்கொள்ளமுடியாது !

பதிவர்களே !
நீங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தாமலிருந்தால் பறவாயில்லை ஆனால் அவரைப்பற்றி அவதூறு பரப்பினீர்களே அங்கு தான் உங்கள் weakness தெரிகிறது ! உங்கள் நோக்கம் அதிக ஹிட்களை பெறுவது தான் என்பது அனைவருக்கும் தெரியும். அதுதான் குறிக்கோள் என்று செயல்படும் பதிவுகளை பதிவுகளின் தலைப்புகளிலேயே தெரிந்து கொள்ளமுடியும் அதற்க்காக இறந்த ஓர் எழுத்தாளரை இப்படியெல்லாம் பாடுபடுத்துவதா அதுவும் மூன்றாந்தர வார்த்தைகளை மிகச் சாதாரணமாக பயன்படுத்தி ?

நமக்குள் பல பிரச்சனைகள் இருக்கின்றன. அதைவிடுத்து ஒருவரின் மரணத்தை வைத்து இல்லாதபலவற்றைக்கற்பனை செய்து அதை தலைமேல் தூக்கி ஆடி மற்றவர்களையும் வம்புக்கு இழுப்பதே இன்றய தமிழ் வலைப்பதிவுலகத்தில் பெரியவர்களெனக்கூறுபவர்களின் வேலை (அன்று சுஜாதா மறைவுக்கு சந்தேஷமாகப்பதிவெளுதியோர் பலர் தமிழ்மணத்திற்கு பழையவர்கள்) பதிவுபோட்டவர்களுக்கு போய்ப்பின்னூட்டமிட்டவர்களும் அனேகர் பழையவர்களே அவர்கள் ஒன்று தெரிந்து கொள்ளட்டும் முகமூடி போட்டுக் கொண்டு சமூகத்தை நாசமாக்கும் முகமூடி திருடர்களின் காலம் நிலைப்பதில்லை. முகமூடிக்கள் ஒளிந்து ஒளிந்து தான் வாழ வேண்டும். முகங்களை மறைத்து தான் சமூகத்தை நாசமாக்க வேண்டும். சமூகம் விழித்துக் கொள்ளும் பொழுது முகமூடிகள் கிழிக்கப்படும். எல்லா சமூகங்களிலும் இது தான் தெளிவான உண்மை.

கடந்தவாரம் தமிழ்வலையுலகம் சுஜாதாவின் மரணத்தின் பின் வந்த பதிவுகளால் நிலைகுலைந்து கொண்டிருப்பது அனைவ‌ருக்கும் தெரியும். நிறைய பேர் வேடிக்கை பார்த்தார்கள் நானும் ஒப்புக்கொள்கிறேன். இதில் வந்து வாசிக்கும் போதே குற்ற உணர்ச்சி தோன்றுகிறது தமிழனுக்கே உரித்தான ஒற்றுமையின்மை, இங்கேயும் காட்சி தர ஆரம்பித்து விட்டது என எண்ணத்தோன்றுகிறது . பல மூத்த பதிவர்கள் மொளனம் சாதிப்பது (திரட்டிகளின் நிர்வாகத்தினர் ) வருத்தத்தை அளிக்கிறது . நிறைய‌ பேர் என்னைப்போல் தனிப்பட்டரீதியில் (பின்னூட்ட , மின்னஞ்சல் ) காய‌ப்ப‌டாத‌தினாலும் அமைதியாய் இருந்திருக்க‌க் கூடும். நம் நாட்டில், எத்தனை கொடுமைகள் தினமும் நடைபெறுகின்றன அவற்றையெல்லாம் தட்டிக்கேட்கமுடியாமல் பழகிக் கொண்டுள்ளோம். அல்லவா அதுமாதிரி தான் இந்த வலையுலகில் சில கொடுமைகள் நடைபெறுகின்றன எங்கேயாவ‌து நடந்தால் நடந்துவிட்டுப்போகட்டுமே என்கென்ன என்னால் எதிர்த்துப்பேசவா முடியும் ( நாம் அன்றாடம் பார்க்காத,கேட்காத அசிங்கங்களா,கொடுமைகளா இந்த வலைப் உலகில் புதிதாக பார்க்கிறோம்..என்று மனதைத் தேற்றவேண்டியது தான்.

கொஞ்சக்காலமாய்த்தான் எழுதுகிறேன். எத்தனையோ பேரை நண்பர்களாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் அவர்களே அனானிகளாக வந்து இழிவாக எழுதுகிறார்கள் இதை எங்குபோய் சொல்லியழுவது ?

பதிவர்களே இத்தகைய வீணான பதிவுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, நல்ல பதிவுகளுக்கு மட்டுமே பின்னூட்டமிட்டு ஆதரவு கொடுங்கள்

நன்றியுடன்

மாயா

Read more...
Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP