காரைநகரீந்த மைந்தன் தி.மகேஸ்வரனுக்கு அஞ்சலிகள்
நல்லார் மனதில் கைத்தல நித்திலமே
ஆரைமேற் பூசாய் ஆரோகணித்த அரசியல் வாதியே
எல்லாப்புகழுக்கும் ஏற்றவா எங்குற்றாய்
இந்தாண்டு பாராளமன்றத்தில் நீசெய் இடியுரை
எல்லோரும் வியக்கும் வண்ணம் எடுப்பாய் செய்தமை
மின்னல் கீற்றாய் மாற்றாரை முட்டியடித்ததோ காண்
சொல்லாமல் கொள்ளாமல் டக்கெனச் சென்றாயோ
உள்ளமது திறந்து பேசி ஊரோடுறவாடி
கள்ளமில்லா அன்பால் கனிவாக சுகம் கேட்பீரையா
எள்ளவும் எண்ணவில்லை உன்சரண நாளிதனை
மெள்ளவுனை அழைத்தானோ பொன்னம்பலவாணேசன்
இந்து மதத்தின் இணையில்லாக்காவலனே
நந்தம் தமிழினத்தின் துயர் களைந்த நேயனே
சந்ததம் சிவத்தமிழை சிந்திக்கும் சாகரனே
உந்தனைப்போலினியெவர்ரெமக்கு உதவுவார்
அறநெறி வாழவைத்தாய் அன்பு நெறி ஓங்க வைத்தாய்
திறநெறி சூழவைத்தாய் தெர் புதிதாய் ஓடவிட்டாய்
மறநெறி மாள வைத்தாய் மன் நெறியை ஏந்த வைத்தாய்
குறள் நெறியைக்கைக்கோண்டாய் குற்றமென்ன செய்தாய் சூடுற
ஈழத்து சிதம்பரனை இறுதிநாள்வரை நினைத்து
மாழாக்க மில்லா மண்ணக வாழ்வு வாழ்ந்த மகேஸ்வரா
வையத்துள் உன்வாழ்வு வரலாறாய் ஆனதால்
தெய்வத்துள் நீயிருப்பாய் தினம் தினமுன் பேரிருக்கும்
ஆக்கம்
சிவயோகச்செல்வர்
சாம்பசிவம் சிவாச்சாரியார்