சிவாஜி


நீண்ட நாட்களாக மற்றவர்கள் காத்திருந்தது போலவே, பலத்த எதிர்பார்ப்பிற்கு பிறகு சிவாஜி படம் நன்றாக தானிருக்கிறது; நன்றாக ஓடுகிறது; ஓட வேண்டும் என்பதே எனது விருப்பமும் கூட - ஏ.வி.எம். நிறுவனத்திற்காகவாவது. எனது வருத்தமெல்லாம்,

வழமையான ரஜனி படங்களில் பெண்களுக்கு எதிரான வசனங்கள் காட்சிகள் வரும் இம்முறை அவை இல்லை.(தமிழ்ப் பெண் வேண்டுமென்றால் யாழ்ப்பாணம்தான் செல்ல வேண்டும் என்று சுஜாதா ஒரு வரியில் மிகப் பெரிய அங்கீகாரம் அளித்திருப்பதை பலர் க‌வதானித்தார்களோ தெரியவில்லை.)

சங்கரின் சிவாஜி எல்லோருக்கும் தெரிந்த கறுப்புப் பணம் பற்றிய ஒரு வரிக் கதைதான் சங்கர் வழமைபோல் தன் பாணியில் அதிரடியாகவும் பிரமாண்டமாகவும் கொடுத்துள்ளார். இதனைப் பற்றி நான் அதிகம் அலட்டிக்கொள்ளவிரும்பவில்லை.

சிவாஜி படத்தினை பற்றி:1.
விவேக் மிக நன்றாக செய்திருக்கிறார்; அந்நியன் போலவே. வசனங்கள் அவர் எழுதியதா அல்லது சுஜாதா எழுதியா என்று தெரியவில்லை.நன்று.

.'தமிழ்நாட்டில், கற்பை பத்தியும் கருப்பை பத்தி மட்டும் பேச கூடாது''பால் சாப்பிட்டு வளர்ந்த மாதிரி தெரியலையே.... டிக்காஷன் சாப்பிட்டு வளர்ந்த மாதிரி இல்ல இருக்கு...'2. ரஜினியின் நகைச்சுவை காட்சிகளும் நன்றாக வந்திருக்கிறது.'என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே!''Mr. தொண்டை சொன்னா தான் வருவேன்'சிவாஜி மாதிரி, வசந்த மாளிகை பாடலில் முயற்சித்திருப்பது.'இப்ப எப்படி கமலஹாசன் மாதிரி வர்றேன் பாரு'...இது போன்ற மெல்லிய நகைச்சுவைகள்...இப்படத்தில் ரஜினி பேசும், 'பன்னிங்க தாண்டா கூட்டமா வரும்... சிங்கம் எப்பவும் தனியாக தான் வரும்', என்ற வசனம் ஏற்கனவே 'கிரி' படத்தில் அர்ஜூன் பேசியது.'நான் காசு தர்றேன் படிக்கிறியா', என்ற வசனமும், காட்சியும் அப்படியே

3. பட்டிமன்ற நகைச்சுவையாளர் ராஜாவிற்கு படத்தில் ஒரு வேலையும் இல்லை.

4. தொண்டைமானாக வரும் பாப்பையா, ராஜாவிற்கு எவ்வளவோ பரவாயில்லை... 'அது தான்யா பண்பாடு...', அழகு!

5. ஸ்ரியா.... இவர் படத்தில் பேசுவதே சில வசனங்கள் தான். அதையும் ஒழுங்காக சொல்லித்தரவில்லையா? வாயசைப்பது ஒரு மாதிரியும் வசனம வேறொரு மாதிரியும் இருக்கிறது. பாடல்களில் இன்னும் மோசம். நடனம் நன்றாக ஆடுகிறார்.

6. கடைசி காட்சியில் கத்தை கத்தையாக பறந்து வரும் பணத்தை பிடிக்க வரும் மாணவன், 'இன்னும் ஆயிரம், இரண்டாயிரம் தான்', என்று ஏன் ஆகாயத்தை பார்த்துக் கொண்டிருக்கிறான்? கீழே கோடி கோடியாக இறைந்து கிடக்கிறது; எதற்காக பறக்கும் பணத்தை பிடிக்க முயற்சி செய்கிறான்? வில்லனின் கழுத்தை மிதிக்க வைப்பதற்காகவா? என்ன சங்கர்?7. ஏ.ஆர்.ரகுமான் அடக்கி வாசித்திருக்கிறார். அல்லது வாசிக்க மறந்து விட்டாரா?

8. சண்டை காட்சிகள் மிகவும் சுமாராக இருக்கிறது. கிளைமேக்ஸை தவிர்த்துப் பார்த்தால். பின்னி மில்லில் ரஜினி ரவுடிகளை அடிப்பதும், பின்பு அவர்கள் ரஜினியுடன் இணைவது ஒட்டவே இல்லை.

0 பின்னூட்டம்(கள்):

Post a Comment

Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP