யாழ் நல்லூர்க்கந்தனுக்கு திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (06.08.2008) 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது.கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கும் நல்லூர் திருவிழா எதிர்வரும் 31ஆம் நாள்வரை 25 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.யாழ்.குடாநாட்டில் தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இம்முறை என்ன திருவிழா என்னமாதிரி நடக்குமனெ தெரியாதுள்ளது

எதிர்வரும் 15ஆம் திகதி மாலை 5 மணிக்கு மஞ்சத் திருவிழாவும் 23ஆம் திகதி மாலை 5 மணிக்கு கார்த்திகைத் திருவிழாவும் 25ஆம் திகதி காலை 7 மணிக்கு சந்தான கோபாலர் திருவிழாவும் இடம்பெறும்.
25ஆம் திகதி மாலை 5 மணிக்கு கைலாச வாகனமும் 26ஆம் திகதி காலை 7 மணிக்கு கஜவல்லி மகா வல்லி உற்சவமும் மாலை 5 மணிக்கு வேல் விமானமும் இடம்பெறும்.
27ஆம் திகதி காலை 7மணிக்குத் தண்டாயுதபாணி உற்சவமும் அன்று மாலை 5 மணிக்கு ஒருமுகத் திருவிழா வும் இடம்பெறும். 28ஆம் திகதி 23ஆம் திருவிழா. மாலை 5 மணிக்கு சப்பரம் இடம்பெறும்.
29ஆம் திகதி 24ஆம் திருவிழா. அன்று காலை 7 மணிக்குத் தேர்த்திரு விழா இடம்பெறும். ஆறுமுகப் பெருமான் வள்ளி தேவசேனா சமேதராகத் தேரில் எழுந்தருளி அடியவர்களுக்கு அருள்பாலிப்பார். 30ஆம் திகதி சனிக்கிழமை 25ஆம் திருவிழா. காலை 7 மணிக்குத் தீர்த்தம் இடம்பெறும்.
31ஆம் திகதி பூங்காவனமும் முதலாம் திகதி வைரவர் சாந்தியும் இடம் பெறும்.
ஆலய வீதிகளில் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் அனைத்துச் செயற்பாடுகளும் நிறைவ டைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 பின்னூட்டம்(கள்):

யாழ்பாடி  

போன முறை மாதிரி இந்த வருசமும் படங்காட்டுவியளே ?

தங்க. முகுந்தன்  

செய்திக்கு எமது வாழ்த்துக்கள்

நன்றி.

Post a Comment

Related Posts with Thumbnails

About Me

My photo
யாழ்ப்பாணம், Sri Lanka

தமிழ்மணத்தில் இந்தக்கணம்

பின்தொடர்வோர்!

இவ் வலைப்பூவினை சிரமமின்றி வேகமாக வாசிக்க, Google Chrome Browser, Opera, Apple Safari browser
போன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்

Back to TOP